சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு.. தமிழக அரசின் பதிலை கேட்கிறது ஹைகோர்ட்
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக்சத்தா கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப கோரி, விஜயகாந்த், ஜெகதீஸ்வரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க தமிழக அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கேரளாவை போல தேசிய தகவல் மையம் மூலமாக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்பது ஜெகதீஸ்வரன் தரப்பு வாதம். இவ்வாறு ஒளிபரப்பு செய்ய முடியுமா என்பது பற்றி அரசிடம் கேட்டு தெரிவிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் விளக்கம் என்னவென்பது, நவம்பர் 11ம் தேதி விசாரணை நடைபெறும்போது தெரியவரும்.












Click it and Unblock the Notifications