நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று கூறிய ஜெயலலிதா.. ஓபிஎஸ் உருக்கம்!
நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

தேனி: நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் நடைபெற்றது.

சசி குடும்பம் மீது குற்றாச்சாட்டு
இந்தக்கூட்டத்தில் அதிமுக பொருளாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா குடும்பத்தினர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

அடிக்கடி கேட்பார்
ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன் என்ற அவர், தினகரனுடன் பேசக்கூடாது என ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் தன்னிடம் அடிக்கடி தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்றும் ஜெயலலிதா கேட்பார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விசுவாசமாக இருங்கள்
தான் தினகரனுடன் பேசுவதில்லை என்று கூறியவுடன் நீங்கள் ஒருவராவது விசுவாசமாக இருங்கள் என ஜெயலலிதா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தான் உயிருடன் இருக்கும் வரை தினகரன் வீட்டிற்குள் நுழைய விடமாட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெ.வுக்கு விசுவாசம்
ஜெயலலிதா ஏன் அவ்வாறு கூறினார் என்று தனக்கு தெரியவில்லை என்ற ஓபிஎஸ் இதுகுறித்து ஜெயலலிதாவிடம் தன்னால் விளக்கம் கேட்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த ஒரே காரணத்திற்காகவே சசிகலா குடும்பம் தன்னை துரோகி என்றதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் பரபரப்பு
தர்மயுத்தம் மேற்கொண்ட போது சசிகலா குடும்பத்தினர் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார் ஓ.பன்னீர்செல்வம். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் சசிகலா குடும்பத்தினர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications