Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காட்டுப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை... கோவில்பட்டியில் பதற்றம்

கோவில்பட்டியில் உள்ள காட்டுப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கசவன்குன்று - ஈராட்சி இடையிலான காட்டுப் பகுதியில் 25வயது மதிக்கத் தக்க ஆண் சடலம் ஓன்று கிடப்பதாகவும், அருகில் இருசக்கர வாகனம் ஒன்றும் அனாதையாக கிடப்பதாகவும் கொப்பம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்து.

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த சடலத்தினை மீட்டு இறந்தவர் யார் ? எந்த ஊர் என விசாரணை நடத்தினர்.

 Auto driver murder in kovilpatti forest area

விசாரணையில் காட்டுப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவரது மகன் ராஜா என்பது தெரியவந்தது.

ஆட்டோ டிரைவரான ராஜா நேற்றிரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றதும், பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் கொலையான ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராஜாவை யாரோ அழைத்துச் சென்று முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம். இந்தக் கொலைக்குப் பெண்தொடர்பு. இல்லை கொடுக்கல் வாங்கல் காரணமா ? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பகுதியில் ஓட்டுநர் கொலையானது கோவில்பட்டியில் பரபரப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+