செம்மொழி ஆய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியிலிருந்து அவ்வை நடராஜன் திடீர் நீக்கம்!
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்ட பின்னர், சென்னையில் மத்திய அரசால் நிறுவப்பட்ட செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து வந்தவரான முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வை நடராஜன் திடீரென அப்பதவியலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நடராஜன் ஏன் நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. 7 மாதத்திற்கு முன்புதான் நடராஜன் இப்பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

நடராஜனை நீக்கியுள்ள மத்திய அரசு, அவருக்குப் பதில், புதிய துணைத் தலைவராக, சென்னை பச்சையப்பன் கல்லுாரியின் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற, பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிறப்பித்துள்ளது.
முன்னதாக செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்தான் இருந்து வந்தார். இருப்பினும் தமிழ் புலமையும், தமிழ் அறிவும் கொண்ட ஒருவரை, இப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற திமுக மற்றும் தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மார்ச் 20ம் தேதி, முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராசன் இப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
ஆனாலும் நடராஜுனுக்கு எந்த விதமான அதிகாரத்தையும், அவர் செயல்படுவதற்குத் தேவையான வசதிகளையும் மத்திய அரசு வழங்கவில்லை. அவமானப்படுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது செயல்படாத நிலையிலேயே நடராஜனை நீக்கியுள்ளது மத்திய அரசு.
மோடி அரசு பதவிக்கு வந்த பின்னர் இந்திக் கொள்கை, சமஸ்கிருதக் கொள்கை என கவனம் காட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியின்போது, திமுகவின் பெரும் முயற்சியால் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழுக்காக அமைக்கப்பட்ட அமைப்பின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடராஜனை நீக்கியுள்ள செயல் தமிழறிஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications