For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி்.. மாணவ, மாணவியர் பங்கேற்பு

Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மின்சார சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தைகள் தின விழா 14.11.15 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மின்சாரம் சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்த பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி காரைக்குடி பெரியார் சிலையிலிருந்து துவங்கியது. இப்பேரணியை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில் நாதன் துவக்கி வைத்தார்.

Awareness rally held in Karaikudi

இப்பேரணியில் காரைக்குடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் விழா கண்ணதாசன் மணி மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

Awareness rally held in Karaikudi

இவ்விழாவுக்கு காரைக்குடி கோல்டன்சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் லயன் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில் நாதன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Awareness rally held in Karaikudi

மதுரை மண்டல மினசார வாரிய தலைமை பொறியாளர் என். நல்லம்மாள் மற்றும் பல்வேறு லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளிகளுக்கு எல்இடி பல்புகள் வழங்கப்பட்டது. பேரணியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

English summary
An awareness rally was held in Karaikudi on Children's day. School children participated in the rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X