போலீஸில் புகார் அளித்த ஆத்திரம்... ஜாமீனில் வந்து அஸ்வினியை கொலை செய்த அழகேசன்
போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த அழகேசன் ஜாமீனில் வெளிவந்து அஸ்வினியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவியான அஸ்வினி மதிய உணவு இடைவேளையின் போது கல்லூரி வாசலுக்கு வெளியே வந்துள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை
அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை கத்தியால் கழுத்தை அறுத்த கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பீதியில் உறைந்த மக்கள்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பீதியில் உறைந்தனர்.

கொலையாளி அழகேசன்
எனினும் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கொலை செய்த நபர் பெயர் அழகேசன் என்றும், அவனது வயது 28 என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்க மறுத்த அஸ்வினி
மதுரவாயலை சேர்ந்த மாணவி அஸ்வினியை அதேபகுதியை சேர்ந்த அழகேசன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை ஏற்க அஸ்வினி மறுத்துள்ளார்.

போலீஸில் புகார்
இதனால் அழகேசன் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது.

புகார் அளித்த ஆத்திரம்
அழகேசனின் தொல்லையால் மாணவி அஸ்வினி ஜாஃபர்கான்பேட்டைக்கு வீட்டை மாற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன் போலீஸில் புகார் அளித்த ஆத்திரத்தில் அஸ்வினியை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.












Click it and Unblock the Notifications