சென்ட்ரலில் 5 மாத குழந்தை கடத்தல்: சிசிடிவி கேமராவில் பதிவான பெண் உருவம்- போலீஸ் விசாரணை
சென்னை : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 மாத குழந்தைக் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு பழனி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். ரயிலைத் தவற விட்டதால் குடும்பத்தோடு பயணிகள் காத்திருக்கும் ஏசி அறைக்கு முன்பு படுத்துத் தூங்கியுள்ளார்.
நேற்று காலையில் எழுந்து பார்த்த போது அருகே படுத்திருந்த 5 மாத பெண் குழந்தை யாழினியைக் காணாததால் ராஜாவும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை யாழினியை கடத்திச் செல்வது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியோடு, குழந்தையைக் கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படுகிற ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பயணிகளிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications