வேலை கிடைக்காத விரக்தி… திருவல்லிக்கேணி லாட்ஜில் பெங்களூர் வாலிபர் தற்கொலை
சென்னை: வந்தாரை வாழவைக்கும் சென்னை என்பார்கள். ஆனால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த இளைஞர் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் திருவல்லிக்கேணி லாட்ஜில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் பெயர் ஜெய்ஷா செக்கர் என்பதாகும். வயது 25. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்தார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து 3 நாட்களாக தங்கியிருந்தார். தினமும் காலையில் இன்டர்வியூவுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமையன்று அவருடைய அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மாற்று சாவிக்கொண்டு அறையை திறந்தனர். உள்ளே அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். ஆங்கிலத்தில் அவர் எழுதி இருந்த இரண்டு வரி கடிதம் அறையில் இருந்தது. அதில் வேலை தேடி வந்தேன். கடவுள் என்னை கைவிட்டு விட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீசார் பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்ஷா செக்கர் வைத்திருந்த செல்போன் நம்பர் உதவியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications