குப்பை தொட்டியில் கிடந்த பிச்சைக்காரரின் பணத்தை எடுக்க பொதுமக்கள் போட்டா போட்டி!
சென்னை: பிச்சைக்காரரின் சில்லரை காசுகளை எடுத்துச் செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியதால் போலீசாரை வரவழைத்து கூட்டத்தை கலைக்க செய்யும் அளவுக்கு நிலைமை போன சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம், கிருஷ்ணன் தெருவில் குட்டி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் விஸ்வநாதன் என்ற பிச்சைக்காரர் வாடகைக்கு தங்கியிருந்தார். ஆனால் ஆறு மாத காலமாக வீட்டு உரிமையாளருக்கு விஸ்வநாதன் வாடகை பணமே தரவில்லை என்று கூறப்படுகிறது.
வாடகையை தருமாறு பலமுறை குட்டி கேட்டுக்கொண்டும், விஸ்வநாதன் வாடகை பணத்தை தரவில்லை. வீட்டின் வெளிப்புறத்தையும் எப்போதும் விஸ்வநாதன் பூட்டியே வைத்திருப்பாராம். ஆறு மாதமாக வாடகை தராத ஆத்திரத்தில் விஸ்வநாதன் போட்டிருந்த பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த குட்டி, அவரது பொருட்களை எடுத்து அருகிலுள்ள குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
அப்படி வீசியதில் ஒரு மூட்டை அவிழ்ந்துள்ளது. அவிழ்ந்த மூட்டைக்குள் இருந்து 5, 10, 50, 100 ரூபாய் நோட்டுகள் வெளியில் நீட்டியபடி இருந்துள்ளன. மேலும், சில்லரை காசுகளும் விழுந்துள்ளன. இதை சிலர் பார்த்து பிச்சைக்காரரின் சில்லரை மட்டும் நோட்டுக்களை அள்ளி சட்டை பையிலும், பேண்டு பாக்கெட்டிலும் திணித்துள்ளார். இதை பார்த்த மேலும் சிலர் பைகளை எடுத்து வந்து காசு எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படியே கூட்டம் சேர்ந்து பிச்சைக்காரரின் பணத்தை பிரிப்பதில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டுள்ளது. பிச்சைக்காரர் ஒருவரின் பணத்தை பிரிக்க மக்கள் போட்டி போட்ட சம்பவம் காஞ்சிபுரம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications