உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவை இல்லை.. பாஜக தனித்தே போட்டியிடும் - ஹெச்.ராஜா
நாமக்கல்: வரும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவை இல்லை. ஆகவே கட்சியினரின் கருத்துப்படி பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
திருச்செங்கோடு ஆர்.எஸ்.எஸ் சார்பில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடந்த சுதந்திர தினவிழாவில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாரதிய ஜனதாவின் சுடர் ஓட்டத்துக்கு தமிழக அரசு 9 மாவட்டங்களில் தடை விதித்திருப்பதோடு பரமக்குடியில் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தேவை இல்லை. ஆகவே கட்சியினரின் கருத்துப்படி பாரதீய ஜனதா தனித்துப் போட்டியிடும். பாலாறு பிரச்சினையில் திராவிட கட்சிகள் மக்களை தூண்டி விடுகின்றன. கர்நாடகாவில் 235 டி.எம்.சி. ஆந்திராவில் 270 டி.எம்.சி. மழைநீர் தான் கிடைக்கிறது. தமிழகத்தில் 295 டி.எம்.சி. மழைநீர் கிடைக்கிறது. அந்த மழைநீரை பாதுகாக்க திராவிட கட்சிகள் ஒரு தடுப்பணைகளைக் கூட கட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications