திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் மர்ம மரணம்
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் இன்று காலை மர்மமான முறையில் இறந்துகிட்டந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர் முத்தணம்பாளையம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் எஸ்.பி.மாரிமுத்து. இவர், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இன்று காலை இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்துக்கு பால் கறக்கச் சென்றார். ஆனால் நீண்டநேரமாக அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது மாரிமுத்து தூக்கில் பிணமாக கிடந்தார். ஆனால் கைகள் கட்டப்பட்டு வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்ததால் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து மாரிமுத்து மர்மா மரணம் தகவல் பரவவே பாஜக நிர்வாகிகளும் அங்கு திரண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாரிமுத்து உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications