தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டது- பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை : தமிழகத்தில் பாஜக காலூன்றி விட்டது என்று பொன். ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
தமிழகத்தில் திராவிட கழகங்கள் அழிந்து விட்டது என்று அடிக்கடி கூறி வருபவர் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். அதேபோல பாஜக தமிழகத்தில் காலூன்றும் என்று கூறி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழகத்தில் பாஜக வேகமாக காலூன்றி வருகிறது என்று கூறினார். இன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக காலூன்றி விட்டது என்று கூறியுள்ளது.
புதுக்கோட்டையில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் பணபேரம் குறித்து விசாரணை நடத்தினால் சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications