முத்துப்பேட்டை கவுன்சிலர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 ஆவது கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் பாஜக வேட்பாளர் செந்தில்குமார் 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திருமலை 213 வாக்குகள் பெற்று மயிரிழையில் தோல்வி அடைந்தார்.
வெற்றி பெற்ற செந்தில்குமார், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்துடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வெற்றியினை பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இணிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications