இந்துக்கள் மனதை புண்படுத்தினார் திருமாவளவன்... கோவையில் 8 காவல்நிலையங்களில் பாஜக புகார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து மதத்தை புண்படுத்தியதாக கோவையில் 8 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக இளைஞரணி சார்பில் 8 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் பேசியவை சர்ச்சையை எழுப்பியுள்ளன. தற்போது சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பௌத்த விகார்களாக இருந்தன.

அந்த பௌத்த விகார்களை இடித்துவிட்டுதான் சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அவற்றின் மீது புத்த விகார்களை பேசியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தான் அப்படி ஒரு கருத்தை கூறவில்லை என்று திருமாவளவன் மறுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், இந்து மதத்தை புண்படுத்துவது தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கோயம்புத்தூரில் பாஜக இளைஞரணி சார்பில் திருமாவளவன் மீது 8 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய திருமாவளவன் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications