For Daily Alerts
Just In
ராணிப்பேட்டை வரும் ஜெ.வை குண்டு வைத்துத் தாக்குவோம்- மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு
சென்னை: ராணிப்பேட்டை வரும் முதல்வர் ஜெயலலிதா மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளதை அடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இது தொடர்பாக, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரக்கோணத்தில் உள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு நேற்று கடிதம் ஒன்று வந்தது.
அதில், வரும் 8ஆம் தேதி ராணிப்பேட்டை வருகை வர உள்ள முதல்வர் ஜெயலலிதாவை வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப் போவதாக எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கங்காதரன், வெங்கட்ராமன், சீதாபதி மற்றும் சீதாராமன் என எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
A letter threatening a bomb attack on AIADMK supremo Jayalalithaa during her proposed rally in Raniipettai on April 8 was received by the Vellore S.P.Office.
Story first published: Monday, March 31, 2014, 9:54 [IST]