சென்னையில் நாளை முதல் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வினியோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி, நாளை முதல் சென்னையில், பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், இன்று நிருபர்களிடம் பேசிய சந்திரமோகன் இதுகுறித்து கூறுகையில், வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணி வரும் 8ம் தேதி சின்னம் பதிக்கும் பணி தொடங்கும்.
நாளை முதல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கும். சென்னையிலுள்ள தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக, நகரின் 3 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications