பழனி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபேஸ்.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு
பழனி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பழனி: அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இன்று பழனி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
பழனியை அடுத்த அ. கலைபுத்தூர் கிராமத்தில் இருந்து பிரேம்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தையை எடுத்துக் கொண்டு தாய் தேவி பழனி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவியின் குழந்தை பிரேம்குமாரை அடையாளம் தெரிய மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.

பதறிப் போன தாய் தேவி இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, கடத்தியது யார் என போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக டிஎஸ்பி வெங்கட்ராமன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் திருடு போவதும் கடத்தப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் கூட சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. தொடர்ந்து குழந்தை கடத்தல்கள் நடந்து வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications