மதுரை அரிசி வியாபாரி வீட்டின் லாக்கரை உடைத்து 130 சவரன் நகை, ரூ.2 லட்சம் ஆட்டைய போட்ட மர்மநபர்கள்
அரிசி வியாபாரியின் வீட்டில் 130 சவரன், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அரிசி வியாபாரி ஒருவரது வீட்டில் 130 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அரசரடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் அதே பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அரிசி கடையினுள் புகுந்த மர்மநபர்கள் சிலர் அங்கிருந்த லாக்கரை உடைத்து அதிலிருந்த 130 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

அத்துடன், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன், எஸ் எஸ் காலனி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு வழக்கினை தீவிரப்படுத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications