நெல்லையில் பிஎஸ்என்எல் சிறப்பு ப்ரீபெய்டு வவுச்சர்களில் மாற்றம்
நெல்லை: நெல்லையில் பிஎஸ்என்எல் செல்போன் ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் பிஎஸ்என்எல் ப்ரீபெய்டில் நடைமுறையில் இருந்த வந்த ரூ.177, ரூ.219, ரூ.345, ரூ.535, ரூ.899 சிறப்பு கட்டண வவுச்சர்கள் நேற்று முதல் நடைமுறையில் இருந்து விலக்கப்படுகின்றன.
ஏற்கனவே இந்த நடைமுறையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான நடைமுறை காலம் வரை பயன்பாட்டில் இருக்கும்.
ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சர்கள் தற்போது உள்ள விபரம் வருமாறு, ரூ.111க்கு 20 நாட்கள் வேலிடிட்டி), ரூ.222க்கு 40 நாட்கள் வேலிடிட்டி), ரூ.190க்கு 110 நிமிடம் டாக் டைம், ரூ.333க்கு 60 நாட்கள் வேலிடிட்டி) என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகையாக தற்போதுள்ள ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சர் ரூ.555க்கு 90 நாட்கள் வேலிடிட்டி, ரூ.33க்கான இலவச ரோமிங் ப்ரீபெய்டு சிறப்பு கட்டண வவுச்சருக்கு, ரோமிங்கில் இருக்கும் போது இன்காமிங் கால்கள் அனைத்தும் இலவசமாகவும், அவுட் கோயிங் கால்கள் எஸ்டிடி கால்களுக்கு ஒரு வினாடிக்கு 1.5 காசாவும், நேற்று முதல் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.190 வரை செய்யப்படும் டாப் -அப்களுக்கு முழு டாக் டைம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.