புதுக்கோட்டை அருகே அமைச்சர் நடத்திய அவசர ஜல்லிக்கட்டில் விபரீதம்.. மாடு முட்டி 2 வீரர்கள் பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் கிராமத்தில் அவசரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. எனவே இன்றே ஜல்லிக்கட்டு நடத்த, அரசு அவசரம் காட்டியது. மக்களோ நிரந்தர சட்டம் கேட்டு போராடுகிறார்கள். நாளை சட்டசபை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.

ஆனாலும், ஆங்காங்கு அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடக்கி வைத்தனர். முதல்வர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் மக்கள் எதிர்ப்பால் அவர் சென்னை திரும்பினார்.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் கிராமத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில், கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் மக்களின் எதிர்ப்புக்கு நடுவேயும் அவசரமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த போட்டியின்போது மாடு முட்டியதில் மாடு பிடி வீரர்கள் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் மற்றும் ராஜா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுதவிர 90 பேருக்கு காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரோ, 'மேலிடத்திற்கு' கணக்கு காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் எதையும் ஆராயாமல் ஊர்மக்களை கட்டாயப்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவசர சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற மிஞ்சிப்போனால் இன்னும் ஒருநாளே உள்ள நிலையிலும் கூட, அமைச்சர் இவ்வாறு அவசரப்பட்டு மக்களின் உயிரோடு விளையாடியது எந்த விதத்தில் நியாயம் என மக்கள் குமுறுகிறார்கள். இந்த உயிரிழப்பு சம்பவத்தால் அரசு மீது மக்கள் அதிருப்தியிலுள்ளனர். உரிய ஏற்பாட்டுடன் விளையாட்டு நடந்திருந்தால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று அவர்கள் பொறுமுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications