அமைச்சர் விஜயபாஸ்கர் கொலை குற்றவாளி.. ஸ்டாலின் பகீர் பேட்டி
குட்காவுக்கு லஞ்சம் வாங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் கொலைக் குற்றவாளியாகிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: குட்காவுக்கு லஞ்சம் வாங்கி அமைச்சர் விஜயபாஸ்கர் கொலைக் குற்றவாளியாகிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். லஞ்சம் வாங்கியதை மறுத்து பேச முடியாது என்பதாலேயே சட்டசபையில் பேச தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
குட்கா விற்பனையாளர்களிடம் கோடி கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் குட்கா விற்பனையை அனுமதித்தாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தொடரின் போது இதுகுறித்து பேச திமுகவினர் அனுமதி கோரினர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

குட்கா விற்பனையாளரிடம் லஞ்சம்
இதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குட்கா விற்பனையாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பலகோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.

குற்றச்சாட்டை மறுக்க முடியாது
டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரும் லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தங்களின் குற்றச்சாட்டை மறுத்து பேச முடியாது என்பதற்காக தங்களை பேச அனுமதிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொலைக் குற்றவாளியாகிவிட்டார்..
தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருளை அனுமதித்ததன் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் கொலை குற்றவாளியாகிவிட்டார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து விஜயபாஸ்கர் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிக்கியுள்ள டைரி...
லஞ்சம் பெற்றமது தொடர்பாக வருமானவரித்து அதிகாரி கடிதம் எழுதியும் அதற்கு இதுவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்கவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து 89 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது சுட்டிக்காட்டிய ஸ்டாலின், லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் அடங்கிய டைரியையும் வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications