கருத்து சுதந்திரத்தில் அரசியல் நுழையக் கூடாது: ஹார்வர்டில் கமல் பேச்சு
பாஸ்டன்: ஆட்சி அதிகாரத்தால் கருத்து சுதந்திரம் பாதிக்கக் கூடாது என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியா எதிர்நோக்கியுள்ள வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் கடந்த 6, 7 ஆகிய தேதிகளில் மாநாடு நடந்தது.
இதில் கலந்து கொண்ட உலக நாயகன் கமல் ஹாஸன் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,

ஜனநாயகம்
கருத்து சுதந்திரத்தை ஜனநாயகம் பாதுகாப்பதாக பெருமையாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சி முறை. ஜனநாயக ஆட்சி முறையில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க விழிப்புடன் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது.

ஹிட்லர்
ஜனநாயகத்தின் பெயரைச் சொல்லி தான் ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தார். ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் வரலாற்றில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டது.

கருத்து சுதந்திரம்
கருத்து சுதந்திரம் என்பது யாரும், யாருக்கும் இரக்கப்பட்டு அளிப்பது அல்ல. ஜனநாயகம் என்றாலே கருத்து சுதந்திரம் என்று தான் அர்த்தம் என மெத்தனமாகவும் இருக்கக் கூடாது.

இந்தியா
நான் ஒன்றும் இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கவில்லை. இந்திய ஜனநாயகத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். உலகிற்கே முன்மாதிரி ஜனநாயகமாக இந்தியா இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மாறுதல்
இந்தியா மட்டும் அல்ல உலகமே மாறிக் கொண்டிருக்கிறது. இந்த உலகம் புதிய சவால்களை, வாய்ப்புகளை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்தியா மெத்தனமாக இல்லாமல் உலகிற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

நேரு
வேற்றுமையில் ஒற்றுமை என்று நேருஜி கூறியதை நாம் வெகு விரைவில் இழக்க முயற்சித்து வருகிறோம். அரசியலில் மதம் நுழைவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. அதே போன்று கருத்து சுதந்திரம் என்பது அரசியலை தாண்டியது என்று நான் நினைக்கிறேன். அதில் அரசியல் நுழையக் கூடாது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications