For Quick Alerts
For Daily Alerts
Just In
நடுரோட்டில் எரிந்து சாம்பலான கார் – சென்னை குரோம்பேட்டையில் பரபரப்பு
தாம்பரம்: குரோம்பேட்டையில் நேற்று இரவு நடுரோட்டில் திடீரென்று கார் ஒன்று எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் நேற்று இரவு காரில் தனது குடும்பத்தினருடன் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.
குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலத்தின் கீழே சென்றபோது காரின் முன்பக்க எஞ்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அகஸ்டின் குடும்பத்தினருடன் உடனடியாக காரில் இருந்து இறங்கினர். கார் சற்று நேரத்தில் வேகமாக தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Car suddenly got fired in center road and fully spoiled. Police were investigating about the incident