ஜெ.வை விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்.. வழக்கு தொடுத்தார் அதிமுக நிர்வாகி!

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் பயன்படுத்துகிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அமைச்சர் சீனிவாசனின் தொடரும் சர்ச்சை பேச்சு-வீடியோ

    மதுரை: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் பயன்படுத்துகிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் திண்டுக்கல்லில் அவர் பேசியது பெரிய பிரச்சனை ஆனது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் பேசியது பெரிய பிரச்சனைக்கு உள்ளானது.

    Case filed against Dindigul Srinivasan for his remarks against Jayalalitha

    அதில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பணத்தை கொள்ளையடித்தனர். ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என பேசினார். சீனிவாசன் இப்படி பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் அதிமுக நிர்வாகி சீனிவாசன் வழக்கு தொடுத்துள்ளார்.

    வேடசந்தூர் கூட்டத்தில் ஜெ. கொள்ளையடித்ததாக பேசியது தவறு. முன்னாள் முதல்வரை அவதூறாக பேசியதால் சீனிவாசனை நீக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தாம் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+