டெங்குவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு... ஹைகோர்ட் கிளையில் வழக்கு!
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஹைகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை: டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் உயிரிந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் டெங்கு காய்ச்சல் மரணங்களுக்கு அரசு இழப்பீடு தர உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் நாள்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு 5 பேராவது உயிரிழந்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், டெங்கு மற்றும் பிற ரைவஸ் காய்ச்சலால் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து செயல்பட வேண்டிய ஆய்வகங்கள் முறையே செயல்படவில்லை.
நிலைமை இப்படி இருக்க மதுரையில் 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பூச்சியியல் ஆய்வகத்தைக் கூட மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. பூச்சியியல் ஆய்வகத்தை புதுச்சேரிக்கு மாற்றும் அரசின் முடிவை கைவிட நீதிமன்றம் உத்தரவிடக் கோரியும் ரமேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications