ஆரத்தி தட்டில் பணம் வைத்ததாக புகார்: அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மீது வழக்கு
சென்னை: ஆரத்தி தட்டில் பணம் வைத்ததாக புகார் எழுந்ததை அடுத்து ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் மே 16 ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் கடந்த 1-ந் தேதி அன்று, ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயகுமார் பிரசாரம் செய்தார். அப்போது சிலர் அவரை வரவேற்று ஆரத்தி எடுத்தனர். அவர்களுக்கு ஜெயகுமார் பணம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஹரிநாத் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இருபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.