ஐ.ஐ.டி, என்.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கான மத்திய அரசின் "உதான்" பயிற்சித் திட்டத்தில் குளறுபடிகள்!

நாட்டின் அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியவற்றில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவியர் அதிக எண்ணிக்கையில் சேரும் வகையில் மத்திய அரசு "உதான்" (UDAAN) என்ற நுழைவுத் தேர்வு பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ 6 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 11,12ஆம் வகுப்பு படிக்கும் 1000 மாணவியருக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
இதில் 50% மாணவியர், இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவியராக இருப்பர். இப்பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களை படிப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாகவும் சில நேரடி பயிற்சி வகுப்புகள் வழியாகவும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு 100% கல்வி நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும்.
இப்பயிற்சி திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றுதான் கடைசிநாள். ஆனால் இப்பயிற்சி திட்டம் குறித்து முறையான விளம்பரப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் தமிழகத்தில் மதுரை, கோயம்புத்தூரில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மத்திய பிரதேசத்திலும் மகாராஷ்டிராவிலும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் இந்த திட்டமே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு மட்டுமேதானா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அனைத்து பாடத்திட்ட மாணவர்களுக்குமான திட்டம் என்று மத்திய அரசு அறிவித்த போதும் போதுமான கால அவகாசம் தராமல் அவசரம் அவசரமாக இத்திட்டத்தை ஏன் செயல்படுத்த முயற்சிப்பது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இத்திட்டத்தில் இருக்கும் குளறுபடிகளைக் களைந்துவிட்ட பின்னரே நுழைவுத் தேர்வு பயிற்சி திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்,
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications