மறைந்த பஞ்சு அருணாசலம் உடலுக்கு இளையராஜா, பாரதிராஜா நேரில் அஞ்சலி !
சென்னை: மறைந்த பஞ்சு அருணாசலம் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல வசனகர்த்தாவும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் இன்று சென்னையில் காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவை அன்னக்கிளி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். மேலும், ரஜினி, கமல் ஆகியோரை வைத்து அதிக படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு திரையுலகக் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் நாசர், சிவக்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், திரையுலகைச் சேர்ந்த கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தர் சி, ஜெயம் ரவி, சூர்யா, கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சாந்தனு, வெங்கட் பிரபு, கார்த்திக் ராஜா, ஜித்தன் ரமேஷ், கோவை சரளா, குஷ்பூ, சுந்தர் சி, சித்ரா லஷ்மணன், கம், ஏ.எல். அழகப்பன், எஸ்.வி. சேகர், யுவன் சங்கர் ராஜா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

பஞ்சு அருணாசலத்தின் மகன், மகள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டியுள்ளது. எனவே தற்போதைக்கு மருத்துவமனைக்கு உடல் கொண்டுசெல்லப்படும். 2 நாள்கள் கழித்து இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications