எச்சரிக்கை.. மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டட இடிப்பு பகுதியில் செல்போனுக்கு தடை
மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம் இடிக்கப்படுவதை முன்னிட்டு அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மவுலிவாக்கத்தில் நாளை 11 மாடிக் கட்டடம் இடிக்கப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள மவுலிவாக்கத்தில் கட்டப்பட்ட 11 மாடிக் கட்டடம் கடந்த 2014ம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டட இடிபாட்டில் சிக்கி 61 தொழிலாளர்கள் பலியானார்கள். 27 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.

இந்நிலையில், இடிபட்ட கட்டடத்தோடு, சேர்த்து கட்டப்பட்ட இன்னொரு 11 மாடிக் கட்டடத்தையும் இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, நாளை இந்தக் கட்டடம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிக்குள் வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது.
11 மாடிக் கட்டடத்தை இடிப்பதற்கான முன்னேற்பாடுகளை சிஎம்டிஏ செய்து வருகிறது. இந்தக் கட்டடம் முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து உள்பக்கமாக விழும் வகையில் தகர்க்கப்பட உள்ளது. இதற்காக இரண்டு வாகனங்களில் வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பெருமளவில் வெடிபொருட்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கட்டடத்தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடிக்கப்பட உள்ள கட்டடத்தை காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் விஜயராஜ்குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications