கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. அண்மையில் கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார் என திமுக பொருளார் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Cental Government will take action retrieval of Katchatheevu - Tamilisai

இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கச்சத்தீவை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் தான் இலங்கைக்கு தாரை வார்த்தன. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த பிரச்சனையானது, இருநாடுகளுடைய பிரச்சனை என்பதால் கட்சத்தீவை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

திருப்பூரில் கன்டெயினர் லாரிகளில் இருந்து ரூ.570 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

வரும் 10-ந் தேதி பாஜக தலைமையகத்தில் பாஜக-வின் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், தமிழகத்தில் உள்ள மதுபான பார்களை மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+