மழை சேத நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசுக்கு உதவ மத்திய அரசு தயார்- பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை சேத நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசுடன் இணைந்து, மத்திய அரசும் உதவ தயாராக இருக்கின்றது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்மதுரை வந்தார். வ.உ.சி நினைவு தினத்தையொட்டி சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், "வ.உ.சி. கண்ட கனவுகளை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. உலகத்தில் இந்தியாவை முதன்மையான நாடாக்க உறுதி எடுத்துள்ளோம். பீகார் மாநில அரசியலை தமிழக அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. அந்த மாநிலத்தில் 1.5 கோடி வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைய உள்ளன. எந்தெந்த கட்சிகள் என்று இப்போது கூற முடியாது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை குறித்து தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டு வருகிறேன். பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications