துணைத்தூதர் விஷயத்தில் காட்டும் முனைப்பை தமிழக மீனவர் பிரச்சினையிலும் காட்டுங்கள்: வாசன்
சென்னை: இந்தியத் துணைத் தூதர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவது போலவே, தமிழக மீனவர் பிரச்சினையிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை திரும்பிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் இந்திய தூதரக பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதை செயலுக்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் வலுவாக செயல்பட்டு முனைப்பு கட்டினார்கள்.
அதுபோல் தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் முனைப்பு காட்ட வேண்டும். மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை முக்கியமான ஒன்றாகும். மத்திய, மாநில அரசுகள் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளை இந்த மாத இறுதிக்குள் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கைக்கு வலுவான, உறுதியான முறையில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் மக்களின் ஒருமித்த விருப்பமாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications