கல்வித் துறையை வணிகமயமாக்கும் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது: வைகோ
சென்னை: கல்வித் துறையை வணிகமயமாக்கி, பன்னாட்டுச் சந்தைப் பொருளாக மாற்றும் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மத்திய பாஜக அரசு அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் கடந்த மே மாதம் அளித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக ஜூலை 31-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்கள், கல்வியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவில் ஒருவர் கூட கல்வியாளர் இல்லை. குழுவின் தலைவர் உள்பட 5 பேரும் மத்திய அரசின் செயலாளர்களாக பணியாற்றியவர்கள். இக்குழுவின் உறுப்பினரான ஜே.எஸ்.ராஜ்புத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதில் இருந்தே பாஜக அரசின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
புதிய கல்விக் கொள்கை முழுக்க முழுக்க கல்வியை சந்தைப் பொருளாக்கி விற்பனை பண்டமாக மாற்றும் வகையில் உள்ளது. உலக வர்த்தக நிறுவனத்தின் சேவை வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு கல்வி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம், கோத்தாரி ஆணையம், யஷ்பால் குழு அறிக்கை, ராஜீவ் காந்தி அரசு நடைமுறைப்படுத்திய கல்விக் கொள்கை, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றை டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.
பாடத் திட்டம், பயிற்றுவித்ததல் ஆகியவற்றை மையப்படுத்துதல், கல்வித் துறையில் மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்தல், நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்தல், பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் அதிகாரத்தை ரத்து செய்தல், கல்லூரிகளை பல்கலைக்கழகங்களில் இருந்து பிரித்து அவற்றை திறன்சார் சமூகக் கல்லூரிகளாக மாற்றுவது, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான விதிமுறைகளை தாராளமயமாக்குதல், கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் பட்டங்கள் வழங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ளன.
8-ம் வகுப்பிலிருந்தே பள்ளிக் கல்வியை திறன் சார்ந்ததாக மாற்றுவதன் மூலம் மீண்டும் குலக்கல்வி திட்டத்துக்கு உயிரூட்டுகிறது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள கல்வி அடிப்படை உரிமையை பறிப்பது மட்டுமின்றி இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்தல், ஆய்வு என்ற பெயரில் சமஸ்கிருத திணிப்பை சட்டமாக்குதல் ஆகிய பேராபத்துக்கள் இதில் உள்ளன.
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் பறிக்கப்படும். கல்வித் துறையின் இறையாண்மை பலி கொடுக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு முற்றாக நிராகரிக்க வேண்டும். பிரதமர் மோடி இதனை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications