மத்திய அரசின் 'ஆபரஷேன் அப்பல்லோ'... அதிர்ந்த சசிகலா... தலைவர்கள் படையெடுப்பின் பரபர பின்னணி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடக்கத்தில் அமைதி காத்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால் எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட 27 பேர் டீமை அனுப்பி இப்போது ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது மத்திய அரசு.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தொடக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை சம்பிராதய அறிக்கைகளையே வெளியிட்டு வந்தது. ஒருகட்டத்தில் டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.

எய்ம்ஸ் மருத்துவர்கள்
தனியார் மருத்துவமனைக்கு வந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர் என்ற செய்தியே அந்த அறிக்கை மூலமாகத்தான் அனைவரும் அறிய முடிந்தது. எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சற்று கூடுதல் விவரங்கள் வெளியாகின.

நெருக்கடி
இதனைத் தொடர்ந்தே தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என ஆளுநர் வித்யாசகர் ராவ் மூலம் அழுத்தம் கொடுத்தது மத்திய அரசு. பின்னர் ஓ. பன்னீர்செல்வத்திடம்தான் முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள துறைகள் ஒப்படைக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து சாதித்தது மத்திய அரசு.

27 பேர் டீம்
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உண்மையான தகவல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள், உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 27 பேர் கொண்ட டீம் அப்பல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆபரஷேன் அப்பல்லோ
கிட்டத்தட்ட ஆபரேஷன் அப்பல்லோ போலத்தான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இயங்கியது. தற்போது இந்த டீம் ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு தகவல்களை தொடர்ந்து அனுப்பி கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை சிதைத்து அதிரடி காட்டியபோல் தமிழகத்தில் அவ்வளவு சீக்கிரமாக இறங்கவும் பாஜக விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதிர்ந்த சசிகலா
மத்திய அரசின் இந்த நெருக்கடிகளை சமாளிக்க்க முடியாமல்தான் அரசியல் கட்சித் தலைவர்களை அப்பல்லோவுக்கு வரவழைத்திருக்கிறது சசிகலா நடராஜன் டீம். திருமாவளவன் உள்ளிட்ட சிலரை வரவழைத்து பேட்டி கொடுக்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து அப்பல்லோவுக்கு படையெடுக்க மத்திய அரசு அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது 'தற்காலிகமாக'!!
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications