கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் விநியோகம்
நாமக்கல்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 17 பேருக்கும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 1,318 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், 24 கடந்த ஜூன் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன்சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் ,39 கடந்த அக்டோபர் 11ம் தேதி, நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 17 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி மலர்மதி, கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை இனிமேல், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும். வழக்கை அங்கு மாற்றியுள்ளேன். வரும் 17ம் தேதி 17 பேரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றார்.
இதையடுத்து 17 பேருக்கும் 1,318 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகலை படித்து பார்த்த பிறகே கையெழுத்து போடுவோம் என யுவராஜ் கூறினார்.
மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் போது வக்கீல் மூலம் அதைப்பற்றி சொல்லுங்கள். தற்போது இந்த வழக்கை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுகிறேன். அதற்கு அனைவரும் கையெழுத்திடுங்கள் என்று நீதிபதி கூறினார். அதைத்தொடர்ந்து அனைவரும் கையெழுத்திட்டனர். வரும் 17ம் தேதி முதல் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications