அமாவாசையில் பிரசாரத்தை தொடங்கிய சாருபாலா தொண்டைமான்!
புதுக்கோட்டை: திருச்சி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான சாருபாலா தொண்டைமான், அமாவாசை நேரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கியதோடு, மக்கள் குறைகளை உடனுக்குடன் போக்கிய மன்னர் குடும்பத்தில் பிறந்தவள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
திருச்சி லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஞாயிறன்று புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்கு வரும் முன்பே பிரகதாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் முடித்த அவர், அமாவாசை என்பதால் கோவில்பட்டி எனும் இடத்தில் பிரசாரம் தொடங்கினார்.

இதையடுத்து லேணா மண்டபத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசும் போது, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதாக சொல்கிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எழுச்சியுடன் தேர்தல் வேலை செய்ய கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு இது. இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க இது தான் நமக்கு நல்ல வாய்ப்பு.

இதை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியதாகி விட்டது. அந்த தேர்தலில் ஜெயித்த எம்.பி. குமார் இதுவரை இந்த தொகுதிப்பக்கம் வந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. அவர் வரவும் இல்லை. எதுவும் செய்யவும் இல்லை.
நான் மக்கள் குறைகளை உடனுக்குடன் போக்கிய மன்னர் குடும்பத்தில் பிறந்தவள். இப்போதும் இந்த தொகுதியில் இருக்கும் முக்கிய பிரச்னைகளான புதுக்கோட்டை திருச்சி ரயில் பாதையில் மேம்பாலம், சென்னை ஐ.ஐ.டி மாதிரியான பொறியியல் கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிலையம் அனைத்தையும் கொண்டு வருவேன் என்று கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications