அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்.. செங்கல்பட்டில் 4 கிமீக்கு வரிசைகட்டிய வாகனங்கள்.. கோர விபத்து!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்று பாலம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக 4 கிமீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றப்பள்ளி மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலாற்று பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகும்.
இங்கு தினமும் பல லட்சம் வாகனங்கள் செல்லும். தென் மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும் முக்கியமான வழியாகும் இது.

செங்கல்பட்டு பாலம்
முக்கியமாக மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த பாலம் வழியாகவே அதிகம் செல்லும். அதேபோல் அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்த பாலத்தை அதிகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. பல லட்சம் பயணிகள் இந்த பாலம் வழியாக செல்லும் நிலையில், இங்கு விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது. வாகனங்கள் வேகமாக வருவதால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

செங்கல்பட்டு பாலாற்று பாலம்
நேற்று இந்த பாலம் அருகே அரசு பேருந்து மீது வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. மெதுவாக சென்ற அரசு பேருந்து மீது, பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதையடுத்து அந்த காருக்கு பின்னால் வந்த மேலும் சில வாகனங்கள் அடுத்தடுத்து அந்த கார் மீது மோதியது. மொத்தம் ஒன்றன் பின் ஒன்றாக 3 வாகனங்கள் பேருந்து மீது மோதி உள்ளது. மூன்று கார்களும் அங்கும், இங்கும் கவிழ்ந்து சாலையை மொத்தமாக அடைத்தது.

விபத்து
இதனால் பின்னால் வந்த வாகனங்கள் வேகமாக பிரேக் போட்டன. இதையடுத்து அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு அங்கு வாகனங்கள் காத்திருந்தன. நேரம் செல்ல செல்ல அங்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. மொத்தம் 4 கிமீ தூரத்திற்கு அங்கு வாகனங்கள் வரிசையில் நின்றன. நேற்று மாலை 6 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல்
சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் அங்கு காணப்பட்டது. அங்கு விபத்து செய்தி அறிந்ததும் போலீசார் குவிந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் விபத்துக்கு உள்ளான வாகனங்களை கிரேன் உதவியுடன் அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications