31 ஆவது முறையாக இடிந்து விழுந்த சென்னை விமானநிலைய மேற்கூரை – விரைவில் வெள்ளிவிழா
சென்னை: சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை நேற்று இரவு உடைந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடத்தில் இது 31 ஆவது சம்பவமாகும்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன.
2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன. ஆனாலும் இந்த விமான நிலையங்களில் கண்ணாடிகளும், மேற்கூரைகளும் அடிக்கடி தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.

இந்த 2 ஆண்டுகளில் இதுவரை 9 முறை மேற்கூரைகளும், 8 முறை கண்ணாடி கதவுகளும், 9 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துள்ளன. கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் காவலர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தின் ஒரு பகுதி கண்ணாடி மேற்கூரை 31 ஆவது முறையாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் இச்சம்பவத்தினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications