Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லோரிடமும் வெகுளியாக பழகுவார்.. அயனாவரம் சிறுமியின் பரிதாபம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எல்லோரிடமும் வெகுளியாக பழகிய அயனாவரம் சிறுமியின் பரிதாபம்- வீடியோ

    சென்னை: சென்னை அயனாவரத்தில் 17 மிருகங்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி குறித்த தகவல்கள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளன.

    எந்த அளவுக்கு மோசமான முறையில் இந்த மனித மிருகங்கள் அந்த சிறுமியை சீரழித்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சே வெடிப்பது போல உள்ளது.

    அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் பலருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்துள்ளார் இந்த சிறுமி. ஆனால் அந்த சிறுமியின் வெகுளித்தனத்தை இந்த கயவர்கள் பயன்படுத்திக் கொண்டு மிருகங்களாக மாறியுள்ளனர்.

     கோபம் வருகிறது

    கோபம் வருகிறது

    பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தொழிலதிபர். அவரது இரு மகள்களில் இளையவர்தான் இந்த சிறுமி. எல்லோரிடமும் வெகுளித்தனமாக பழகி வந்துள்ளார் இச்சிறுமி. தொடர்ந்து யாருடையாவது கண்காணிப்பு இவருக்கு அவசியமாக இருந்துள்ளது. இந்த இடத்தில்தான் சிறுமியின் தாயார் மீது கோபம் வருகிறது.

     நல்ல மாற்றம்

    நல்ல மாற்றம்

    முதல் முறையாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட போதே அந்த சிறுமியின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிந்திருக்கும். அதை வைத்தாவது சிறுமியிடம் விசாரணை செய்து அந்த சம்பவம் மேலும் நடைபெறாத வண்ணம் தடுத்திருக்கலாம்.

     வாசல் வரை சென்றிருக்கலாம்

    வாசல் வரை சென்றிருக்கலாம்

    பெண் குழந்தைகள் என்றாலே பிஞ்சு குழந்தை முதல் 90 வயது பாட்டி வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலத்தில் காது கேட்காத குழந்தையை அவரது தாய் இன்னும் கூடுதலாக கவனித்திருக்கலாம். சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதும் வீடு திரும்பும் போது தாயோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ குழந்தையுடன் வாசல் வரையாவது வந்து சென்றிருக்க வேண்டும்.

     66 வயது கிழவன்

    66 வயது கிழவன்

    இதை செய்யாமல் விட்டதால் இந்த கேடு கெட்ட 17 மிருகங்களும் சிறுமியை நாசம் செய்துள்ளனர். இதில் முதலில் பலாத்காரம் செய்த 66 வயது கிழவன்தான் மிகவும் கொடூரமானவன். தன் பேத்தி வயதில் இருக்கும் குழந்தையை இதுபோல் செய்திருக்கலாமா. சிறுமியின் தாயும் இவனுடன் பேசும் போது குழந்தைக்கு தாத்தா என்று தானே சொல்லிக் கொடுத்திருப்பார். அப்படி இருந்தும் இதுபோல் வெறிச்செயல் செய்த இவனைதான் முதலில் தூக்கிலிட வேண்டும். இவன் மட்டுமல்லாது மேலும் 16 அயோக்கியன்களையும் தூக்கிலிட வேண்டும். இல்லாவிட்டால் மேலும் கொடூரமான தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கம்.

     ஊட்ட வேண்டும்

    ஊட்ட வேண்டும்

    இவனது வீட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்ட குழந்தையை தன் குழந்தையாக கருதி இவனுகளுக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த 17 பேரை போன்றே இவர்களும் மிருகங்கள் என சித்தரிக்கப்படுவர். தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் மீது பெரும் அக்கறை செலுத்தி குழந்தைகளுக்கு நன்மை தீமைகளை கற்றுத் தர வேண்டும். யார் மிரட்டினாலும் பரவாயில்லை. என்ன நடந்தாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற தைரியத்தை குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+