திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண 2500 பேருக்கு மட்டுமே அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண 2500 பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றுவதைக் காண முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, பக்தர்கள் மலை மேல் ஏறி அதைக் காண மாவட்ட ஆட்சியர் கடந்த 7ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சக்திவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நேற்று விசாரணை வந்த இவ்வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆண்டுதோறும் மகாதீபத்தைக் காண மலைக்கு வரும் பக்தர்கள் போட்டுச் செல்லும் குப்பைகளால் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இதை எதிர்த்து வாதாடிய எதிர்மனுதாரர் வழக்கறிஞர், கார்த்திகை தீபத்தன்று மலைக்குச் சென்று வழிபடுவது மக்களின் நம்பிக்கை. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குறைந்த அளவில் பக்தர்களை மலை மேல் அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க ஒரு நாள் கால அவகாசம் கொடுத்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குறைந்த அளவில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டது.இதனையடுத்து, 2500 பக்தர்களுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்,முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும், பக்தர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை மலைமீது வீசாமல் திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications