திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண 2500 பேருக்கு மட்டுமே அனுமதி : உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலை மகாதீபத்தைக் காண 2500 பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றுவதைக் காண முதலில் வரும் 2500 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, பக்தர்கள் மலை மேல் ஏறி அதைக் காண மாவட்ட ஆட்சியர் கடந்த 7ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சக்திவேல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நேற்று விசாரணை வந்த இவ்வழக்கில், ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆண்டுதோறும் மகாதீபத்தைக் காண மலைக்கு வரும் பக்தர்கள் போட்டுச் செல்லும் குப்பைகளால் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இதை எதிர்த்து வாதாடிய எதிர்மனுதாரர் வழக்கறிஞர், கார்த்திகை தீபத்தன்று மலைக்குச் சென்று வழிபடுவது மக்களின் நம்பிக்கை. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குறைந்த அளவில் பக்தர்களை மலை மேல் அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க ஒரு நாள் கால அவகாசம் கொடுத்தார்.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. குறைந்த அளவில் பக்தர்கள் மலை ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துக்கொண்டது.இதனையடுத்து, 2500 பக்தர்களுக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்,முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும், பக்தர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை மலைமீது வீசாமல் திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications