For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனம் கோர்ட்டார் அவர்களே.. மனுதாரர்களே நேரடியாக வாதாடலாம்.. வக்கீல்கள் போராட்டத்திற்கு ஹைகோர்ட் செக்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு மூக்கணாங்கயிறு போடும் விதமாக சென்னை ஹைகோர்ட் புதிய முடிவை எடுத்துள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த சென்னை ஹைகோர்ட், வக்கீல்கள் போராட்டங்களுக்கும் அவர்கள் செயல்பாடுகளுக்கும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதை எதிர்த்து வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலையிட்டு, அந்த சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

இருப்பினும் வக்கீல்கள் பல இடங்களில் தொடர்ந்து போராடுவதால் ஹைகோர்ட் அதிருப்தியடைந்துள்ளது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஹைகோர்ட் சார்பில் நீதிபதிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

போராட்டம் தொடருகிறதே

போராட்டம் தொடருகிறதே

வழக்கறிஞர் சட்டத் திருத்தம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தும் தொடர்ந்து போராடுவதாக அதில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

அனுமதியுங்கள்

அனுமதியுங்கள்

வழக்கு விசாரணையில் மனுதாரர்களே வாதாடிக் கொள்ள அனுமதி அளிக்க நீதிபதிகளுக்கு அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

வழக்கில் ஆஜராகாத வக்கீல்களின் வக்காலத்தை ரத்து செய்ய வேண்டும். வக்காலத்தை ரத்து செய்வதை எதிர்க்கும் வக்கீல்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கலாம் என நிதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Chennai High court given permission to the petitioner to submit their argument with out advocates help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X