இலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்பு
மதுரை: தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளியை திறக்கக்கோரிய வழக்கில் செப்டம்பர் 4ல் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை.
மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டம் 1986ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக, தரமான படிப்பை விடுதிகளில் தங்கி படிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் தற்போது தமிழ்நாடு தவிர எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக் கூடங்கள் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த பள்ளிகளை அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த பள்ளிகளில் ஹிந்தி ஒருபாடமாக பயிற்றுவிக்கப்படுவதால் தமிழக அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜெயகுமார்தாமஸ் என்பவரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இன்று நடந்த விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்தார்.
அதேசமயம் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பித்தால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றார். இதையடுத்து, நவோதயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பிக்க முடியுமா என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வரும் செப்ம்பர் 4ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஹைகோர்ட் மதுரை கிளை அறிவித்துள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications