ஒரு வாரமாக தொடரும் சட்டக் கல்லூரி போராட்டம்– 7 நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ள கல்லூரி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிராக அந்தக்கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்பு போராட்டம் 7 ஆவது நாளாக தொடர்கிறது.
போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்க உள்ளதாக சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறினர்.

போராட்டத்தின் அடுத்த கட்டமாக, இன்று மாலை தங்களது அடையாள அட்டைகளை எரிக்க உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மாணவர்களை சந்தித்த சட்டக்கல்லூரி முதல்வர் முருகதாஸ் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு நீதிமன்றத்தை நாடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications