புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை
அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு அரபிக்கடலில் அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் மீனவர்கள் மே 23 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சியால் வரும் 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications