சென்னை மெட்ரோ கட்டணம் ரூ.50 ஆக உயர வாய்ப்பு - சின்னமலை முதல் ஏர்போர்ட் வரையிலான புதிய வழித்தடத்தில்!
சென்னை: சென்னை கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் கட்டணத்தினை விட புதிய பாதையில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலின் கட்டணத்தினை உயர்த்த பரீசிலினை செய்யப்பட்டு வருகின்றது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முதல் கட்டமாக ஆலந்தூர் , கோயம்பேடு இடையே இயக்கப்படுகிறது. உயர்மட்ட பாதையில் தற்போது மெட்ரோ ரயில்கள் சென்று வருகின்றன.

10 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சேவைக்கு குறைந்த கட்டணம் ரூபாய் 10ம் அதிக பட்சமாக ரூபாய் 40ம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் அதிகம் என்றும் இதனை குறைக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் பயணிகள் கருத்து தெரிவித்தனர். மற்ற நகரங்களை விட சென்னையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறினர். ஆனாலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கட்டணத்தை குறைக்கவில்லை.
இந்த நிலையில் சின்னமலை, விமான நிலையம் இடையே 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவை தொடங்கும் பட்சத்தில் கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை 15 கி.மீ. தூரத்திற்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள கட்டணத்தை விட கூடுதலாக ரூபாய் 10 சேர்த்து ரூபாய் 50 நிர்ணயிக்க பரிசீலிக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் செல்வதற்கு ரூ. 50 கட்டணம் என்பது நியாயமானது தான். அதிகம் என்று சொல்ல இயலாது" என்று தெரிவித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications