ஓடும் ரயிலில் தெறித்த மேற்கூரை.. பீதியில் அலறிய சென்னை-மைசூர் சதாப்தி பயணிகள்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பெங்களூர்-மைசூர் சதாப்தி அதிவேக ரயிலின் மேற்கூரை கிழிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். அதிருஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரயில் பெட்டி சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.

சென்னையிலிருந்து இன்று காலை மைசூர் நோக்கி புறப்பட்டது நாட்டின் அதிவேக ரயில்களில் ஒன்றான சதாப்தி. இந்த ரயில் அரக்கோணத்திற்கு சற்று முன்பாக சென்றபோது, ஒரு பெட்டியின் மேற்கூரை கிழிந்தது. மின்சாரம் பயணிகள் மீது பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் பீதியில் அலறினர் பயணிகள்.

தகவல் கிடைத்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. அரக்கோணத்தில் வைத்து ரயில் பெட்டி சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக ரயில், கிளம்பி சென்றது. ரயிலின் வேகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரயில் பெட்டி உடைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications