வாக்காளர் பட்டியலில் சென்னையில் 1 லட்சம் இறந்தவர்கள் பெயர்கள்: ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் மட்டும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லக்கானி மேலும் கூறுகையில், சட்டசபை தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை (இன்று) தொடங்க உள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 60 ஆயிரம் மனுக்கள் பெயர் நீக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ளது. போலியாக சேர்க்கப்பட்ட பெயர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அனைத்துக் கட்சிகளும் உதவ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications