தடுக்கி விழுந்தா நேரா சொர்க்கம் தான்.... கரடு முரடான சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகள் சாகஸம்
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் வெள்ளத்தால் சூழப்பட்டு அரித்துச் செல்லப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை சென்னை நகரையே முழுவதுமாகப் புரட்டிப்போட்டது. இதனால் பெரும்பாலான சாலைகளை மழைநீர் சூழ்ந்து, ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், அயனாவரம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட சாலைகளும், மாதவரம்-பொன்னியம்பேடு சாலையும், புறநகர் பகுதிகளான வேளச்சேரி, மடிப்பாக்கம், அம்பத்தூர் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டு கரடு முரடாகக் காட்சியளிகின்றன. எழும்பூர் கென்னட் சாலையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சாலைகளின் பெரும்பாலான இடங்களில் மேடு-பள்ளம் உருவாகி உள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையும், மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரையும் நகரின் பெருமபாலான இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் அவதியுறுகின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழைக்காலம் முடிவடைந்த பிறகு சென்னை நகரில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் கணக்கீடப்பட்டு, போர்க்கால நடவடிக்கையில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை, மற்றும் மாநகராட்சி சார்பிள், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications