சென்னையில் முதல் முறையாக சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் சோதனை.. வெற்றிகரமாக முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் முதல்முறையாக, சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் இயக்கி இன்று சோதிக்கப்பட்டது.
சென்னே மெட்ரோ ரயில் சேவை தற்போது கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை இயக்கப்படுகிறது. மேலும் மற்ற இடங்களில் பணிகள் நடந்துவருகின்றன. விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரை மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஷெனாய் நகர் முதல் கோயம்பேடு வரையிலான 2.7 கி.மீ தூர சுரங்கப்பாதையின் சோதனை ஓட்டம் இன்று அதிகாரிகளால் சோதித்து பார்க்கப்பட்டது.
ரயில் பாதையில் ஒரு ரயில் பெட்டியுடன் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சோதனை ஓட்டத்தின் போது உடன் இருந்தனர். பாதுகாப்பிற்காக இது போன்று சோதனை நடத்தப்படுவதாகவும், விரைவில் மெட்ரோ சேவை விரிவாக தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications