நவராத்திரி பண்டிகை: கோவில்களில் கொலு, கோலாகலம்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நவராத்திரி பண்டிகையை களை கட்டியுள்ளது. அங்குள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் கொலுவைத்து கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் ஒன்பது படிகள் வைத்து கொலு பொம்மைகள் அமைத்து தினசரி பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
புரட்டாசிமாதத்தில் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர்.
மகிஷாசுரனை தேவியானவள்9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்.

நலம் தரும் நவராத்திரி
மகஷனை எதிர்த்து அம்மன் போரிட்ட 9 நாள்களையும் குறிக்கும் வகையில் கொலுவைத்து அம்மனை வழிபடுகின்றனர். சென்னை மயிலாப்பூரில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி கடந்த 5ம் தேதி தொடங்கியது.

6ம் நாள் பண்டிகை
அங்குள்ள கபாலீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், காரணீஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், கோலவிழியம்மன் ஆலயங்களில் நவராத்திரியை ஒட்டி உற்சவர் அம்மனை அலங்கரித்து கொலுமண்டபத்தின் முன் வைத்து வழிபாடு நடத்தினர்.

கலைவிழா உற்சாகம்
நவராத்திரியை ஒட்டி சிறுவர் சிறுமியர்கள் அம்மனைப் போல அலங்கரித்தும், ஆடல் பாடலுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், சுண்டல் பிரசாதம் அளிக்கப்பட்டது.

வெற்றி தரும் விஜயதசமி
9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள். விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.

மாணவர்களே பொம்மைகளா
திருப்புவனம் வேலம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு மழலையர்கள் கொலு பொம்மைகளாக வேடமணிந்து வீற்றிருந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. மழலையர்களுக்கு மீனாட்சி, சிவபெருமான், முருகன், விநாயகர், தன லட்சுமி என பல்வேறு வேடங்கள் அணிந்து கொலு பொம்மைகளாக வேடமணிந்து கொலு அமைத்திருந்தனர்.

இந்திரா காந்தி கல்பனா சாவ்லா
சாதனை பெண்மணிகளான இந்திராகாந்தி, கல்பனாசாவ்லா உள்ளிட்ட பெண்களை போலவும் வேடமணிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். மழலையர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது.

நல்ல காரியங்கள் நடக்கும்
குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.

உற்சாகப் பண்டிகை
நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் தசரா பண்டிகையாகவும், வடமாநிலங்களில் துர்கா பூஜாவாகவும் உற்சாகமாகக் கொண்டாப்படுகிறது
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
Kerala Lottery: கோவை போயிட்டு வரும்போது வாங்கிய டிக்கெட்! பாலக்காட்டில் 10 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பூரிப்பு












Click it and Unblock the Notifications